» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காங்கிரஸ் கட்சி நிர்வாகி தீக்குளிக்க முயற்சி: வேட்பாளர் பட்டியலை மாற்ற வலியுறுத்தல்!

ஞாயிறு 24, மார்ச் 2024 1:22:05 PM (IST)



காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை மாற்ற வலியுறுத்தி  கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 9 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்  தேர்வு ஜனநாயக முறையில் நடைபெறவில்லை, பல கோடி  ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், காங்கிரஸ் கட்சிக்காக உழைத்தவர்களுக்கும், விசுவாசிகளுக்கும், முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான வாழப்பாடி ராமமூர்த்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தர வலியுறுத்தி 

காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி வடக்கு துணை தலைவர் வழக்கறிஞர் அய்யலுச்சாமி என்பவர் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு உடலில் டீசல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.   இது குறித்த தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரை தடுத்து நிறுத்தி ,  அவர் மீது தண்ணீர் ஊற்றினர். தொடர்ந்து  அவரை கைது செய்துகோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து

சம்பவம்Mar 24, 2024 - 06:45:08 PM | Posted IP 162.1*****

யாராவது அவருக்கு தெரியாம பத்தவேச்சா மிகவும் நன்றாக இருக்கும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory