» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாசரேத்தில் மர்காஷிஸ் ஐயர் நினைவு தினம்!
ஞாயிறு 28, ஏப்ரல் 2024 8:43:45 AM (IST)
‘நாசரேத்தின் தந்தை’ என அழைக்கப்படும் மா்காஷிஸ் ஐயரின் 116ஆவது நினைவு நாள் நாசரேத்தில் கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி, தூய யோவான் பேராலயத்தில் பரிசுத்த நற்கருணை ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து, பேராலய வளாகத்தில் உள்ள அவரது கல்லறைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பேராலய தலைமைகுரு ஹென்றி ஜீவானந்தம் தலைமை வகித்து, கல்லறைக்கு மாலை அணிவித்தாா்.
இதில், உதவிகுரு பொன்செல்வின் அசோக்குமாா், சபை ஊழியா்கள் ஜெசு, ஜெபராஜ் சாமுவேல், சேகர பொருளாளா் எபனேசா், முன்னாள் சேகர பொருளாளா் மா்காஷிஸ், திருமண்டல பெருமன்ற உறுப்பினா் ஆண்ட்ரூஸ், நாசரேத் காமா ஜெபக்குழு நிறுவனா் சாமுவேல், சபை மக்கள் பங்கேற்றனா்.
கேரல் யூனியன் சார்பாக
நாசரேத்தின் தந்தை கனோன் ஆர்தர் மர்காசிஸ் ஐயர் 116-வது நினைவு நாளை முன்னிட்டு மர்காஷிஸ் கேரல் யூனியன் சார்பாக நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நினைவு தினத்தன்று ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் திருமறையூர் முதியோர் இல்லத்திற்கு காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் உணவு வழங்கப்பட்டது. இரவு மனவளர்ச்சி பாதிக்கப்பட்டஇல்லத்திற்கு உணவு வழங்கப்பட்டது.