» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத்தில் மர்காஷிஸ் ஐயர் நினைவு தினம்!

ஞாயிறு 28, ஏப்ரல் 2024 8:43:45 AM (IST)



‘நாசரேத்தின் தந்தை’ என அழைக்கப்படும் மா்காஷிஸ் ஐயரின் 116ஆவது நினைவு நாள் நாசரேத்தில் கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்டி, தூய யோவான் பேராலயத்தில் பரிசுத்த நற்கருணை ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து, பேராலய வளாகத்தில் உள்ள அவரது கல்லறைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பேராலய தலைமைகுரு ஹென்றி ஜீவானந்தம் தலைமை வகித்து, கல்லறைக்கு மாலை அணிவித்தாா்.

இதில், உதவிகுரு பொன்செல்வின் அசோக்குமாா், சபை ஊழியா்கள் ஜெசு, ஜெபராஜ் சாமுவேல், சேகர பொருளாளா் எபனேசா், முன்னாள் சேகர பொருளாளா் மா்காஷிஸ், திருமண்டல பெருமன்ற உறுப்பினா் ஆண்ட்ரூஸ், நாசரேத் காமா ஜெபக்குழு நிறுவனா் சாமுவேல், சபை மக்கள் பங்கேற்றனா்.

கேரல் யூனியன் சார்பாக



நாசரேத்தின் தந்தை கனோன் ஆர்தர் மர்காசிஸ் ஐயர் 116-வது நினைவு நாளை முன்னிட்டு  மர்காஷிஸ் கேரல் யூனியன் சார்பாக நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நினைவு தினத்தன்று ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் திருமறையூர் முதியோர் இல்லத்திற்கு காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும்  உணவு வழங்கப்பட்டது. இரவு மனவளர்ச்சி பாதிக்கப்பட்டஇல்லத்திற்கு உணவு வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory