» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் இளம்பெண் திடீர் மாயம்!
சனி 4, பிப்ரவரி 2023 10:53:35 AM (IST)
தூத்துக்குடியில் இளம்பெண் ஒருவர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாப்பிள்ளையூரனி ஜோதிபாசு நகரை சேர்ந்தவர் சந்தோசம் இவரது மகள் சித்ரா (23). இவர் கடந்த 1ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவரது தந்தை சந்தோஷம் தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.