» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 லட்சம் பீடி இலைகள் பறிமுதல் - 2பேர் கைது!

வெள்ளி 26, ஏப்ரல் 2024 11:10:08 AM (IST)



திருச்செந்தூர் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே ஆலந்தலை கணேசபுரம் பகுதியில் கியூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதா தலைமையில் உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ், செல்வகுமார், தலைமை  காவலர் ராமர், இருதயராஜ், காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் நேற்று ரோந்து சென்ற போது சந்தேகத்திற்கு இடமாக சென்ற வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.

அதில், இலங்கைக்கு கடத்துவதற்காக 42 மூடை பீடி இலைகள் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அதிலிருந்த சுமார் 1,250 கிலோ பீடி இலைகளை வாகனத்துடன் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 10 லட்சம் ஆகும். இது தொடர்பாக ஆலந்தலையைச் சேர்ந்த தொம்மை மகன் ராஜா (29), வாகனத்தை ஓட்டிவந்த தூத்துக்குடி எஸ்எஸ் மாணிக்கபுரத்தைச் சேர்ந்த வேல் மகன் பாலமுருகன் (35) ஆகிய 2பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory