» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பட்டப்பகலில் வீடு புகுந்து ரூ.2.45 லட்சம் பணம் திருட்டு
செவ்வாய் 29, நவம்பர் 2022 10:57:56 AM (IST)
குளத்தூர் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து ரூ.2.45 லட்சம் பணத்தை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே பூசனூர் கிராமம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் செந்தூர்பாண்டி மனைவி முருகாயி (57). இவர் நேற்று பிற்பகல் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது, மர்ம நபர் வீட்டிற்குள் நுழைந்து அங்கு பையில் வைத்திருந்த ரூ.2.45 லட்சம் பணத்தை திருடிச் சென்றுவிட்டாராம். இதுகுறித்து குளத்தூர் காவல் நிலையத்தில் முருகாயி புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முத்துமாரி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.