» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பட்டப்பகலில் வீடு புகுந்து ரூ.2.45 லட்சம் பணம் திருட்டு

செவ்வாய் 29, நவம்பர் 2022 10:57:56 AM (IST)

குளத்தூர் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து ரூ.2.45 லட்சம் பணத்தை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே பூசனூர் கிராமம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் செந்தூர்பாண்டி மனைவி முருகாயி (57). இவர் நேற்று பிற்பகல் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது, மர்ம நபர் வீட்டிற்குள் நுழைந்து அங்கு பையில் வைத்திருந்த ரூ.2.45 லட்சம் பணத்தை திருடிச் சென்றுவிட்டாராம். இதுகுறித்து குளத்தூர் காவல் நிலையத்தில் முருகாயி புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முத்துமாரி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory