» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பிளஸ் 2 மாணவி தற்கொலை: போலீஸ் விசாரணை!

திங்கள் 28, நவம்பர் 2022 4:37:58 PM (IST)

கயத்தாறு அருகே 12ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே தெற்கு கோனார் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவன். இவருக்கு மகேஷ்வரி (17), கார்த்திகா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் மகேஸ்வரி தெற்கு கழுகுமலையிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டு உத்திரத்தில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கயத்தாறு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சப் இன்ஸ்பெக்டர் அந்தோணி திலீப் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிந்து, மாணவி மகேஸ்வரி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory