» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் அக்.7ல் மின்தடை அறிவிப்பு
செவ்வாய் 4, அக்டோபர் 2022 8:18:27 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வருகிற 7-ம் தேதி மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி ஊரக மின்சார வாரிய செயற்பொறியாளர் முத்துராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு "தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், குளத்தூர், சூரங்குடி ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 7-ந் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.
இதனால் விளாத்திகுளம் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட மந்திகுளம், செங்கல்படை, கமலாபுரம், பிள்ளையார்நத்தம், பேரிலோவன்பட்டி, விளாத்திகுளம், அயன்பொம்மையாபுரம், ராமச்சந்திராபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும், குளத்தூர் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட கீழவைப்பார், வைப்பார், வேப்பலோடை, குளத்தூர், மார்த்தாண்டம்பட்டி, முள்ளூர் ஆகிய பகுதிகளிலும், சூரங்குடி துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட மேல்மாந்தை, ஈ.வேலாயுதபுரம், வேம்பார், பச்சையாபுரம், அரியநாயகிபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும் மின் வினியோகம் நிறுத்தபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.