» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குலசை தசரா திருவிழா: 3 நாட்கள் மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!

வெள்ளி 30, செப்டம்பர் 2022 12:39:27 PM (IST)

தசரா திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை 3 நாட்கள் 35 டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு "அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா முன்னிட்டு 04.10.2022 முதல் 06.10.2022 வரை மூன்று தினங்கள் மட்டும் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடை/பார்) விதிகள், 2003 பிரிவு 12 துணை விதி (1)-இன் படி குலசேகரன்பட்டிணம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள கீழ்க்காணும் மதுபானக் கடைகளை மூடப்பட்டிருக்க வேண்டும்.

மேற்படி நாளில் மதுபான விற்பனை செய்யப்பட்டுள்ளதால் அன்றையதினம் மதுபான விற்பனை நடைபெறக் கூடாது. தடைமேற்குறிப்பிட்ட தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

மூடப்பட வேண்டிய கடைகள் பட்டியல்



மக்கள் கருத்து

hi hi hiOct 3, 2022 - 01:43:10 PM | Posted IP 162.1*****

ada ANBU maala pottavan thaane kudikkiraan. hi hi hi

அன்புOct 2, 2022 - 09:28:36 AM | Posted IP 162.1*****

குடிக்கிறான் 90%மாலை போட்டாச்சு பிறகு எதுக்கு மூடிரீங்க.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory