» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வங்கி ஊழியர் மர்ம மரணம் : தந்தை புகார் - போலீஸ் விசாரணை

புதன் 28, செப்டம்பர் 2022 4:19:33 PM (IST)



தூத்துக்குடியில் தண்டவாளம் அருகே காயங்களுடன் இறந்து கிடந்த வங்கி ஊழியரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி அண்ணாநகர் 3 வது தெருவை சேர்ந்தவர் சங்கரநாராயணன் (62), இவரது மகன் பிரணவ நந்தேஷ் (32) பி.இ., முடித்துள்ளார். படர்ந்தபுளி கனரா வங்கி கிளையில் கிளர்க்காக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் பணி நிமித்தமாக எட்டையபுரத்தில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று பிற்பகலில் மீளவிட்டன் ரயில் நிலையத்திற்கு கீழ்பக்கம் அய்யனார் கோவிலுக்கு தெற்கே உள்ள தண்டவாளத்தின் அருகே பிரணவ நந்தேஷ் படுகாயத்துடன் இறந்து கிடந்தார். 

அவர் சட்டை எதுவும் அணியாமல் ஜட்டி மட்டும் அணிந்தவாறு அமர்ந்திருந்த நிலையில் பிணமாகக் கிடந்தார். தண்டவாளம் அருகே அவரது சேதம் அடைந்த நிலையில் பைக் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து தூத்துக்குடி ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மகா கிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 

பிரணவ நந்தேஷ் மீளவிட்டான் ரயில் நிலையத்தில் இருந்து பைக்கில் தண்டவாளத்துக்குள் வந்து உள்ளார். பின்னர் தண்டவாளத்தின் நடுவில் வேகமாக பைக்கை ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது. அப்போது நிலை தடுமாறி விழுந்த அவருக்கு பலத்த அடிபட்டு உள்ளது. அதேநேரத்தில் அவரது ஆடைகள் கிழந்து சேதம் அடைந்து உள்ளன. அதன்பிறகு அவர் சேதம் அடைந்த தனது மேலாடைகளை கழற்றிவிட்டு அருகே உட்கார்ந்து இருந்த நிலையில் பரிதாபமாக இறந்து இருப்பது தெரியவந்தது.  

எதற்காக தண்டவாளத்தில் வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றார்? தற்கொலை செய்ய முயன்றாரா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே பிரணவ நந்தேஷ் மரணத்தில மர்மம் இருப்பதாக அவரது தந்தை சங்கர நாராயணன் புகார் தெரிவித்துள்ளார். புகார் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கி ஊழியர் ரயில் தண்டவாளத்தில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory