» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாதம் ஒருமுறை மின்அளவீடு செய்ய கோரிக்கை : மக்கள் நீதி மய்யம் கையெழுத்து இயக்கம்

செவ்வாய் 27, செப்டம்பர் 2022 8:12:04 AM (IST)

தூத்துக்குடியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மின்கட்டண உயர்வை கண்டித்து கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

தமிழகத்தில் மின்கட்டண உயர்வு ஏழை, எளிய மக்களையும், நடுத்தர மக்களையும், சிறு குறு தொழில் செய்பவர்களையும், சிறிய, நடுத்தர வியாபாரிகளையும் பெரிதும் பாதிப்படையச் செய்து உள்ளது. உணவுப்பொருட்களின் விலையும் அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. ஆகையால் உடனடியாக மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். மாதம் ஒருமுறை மின்அளவீடு செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. 

நிகழ்ச்சிக்கு மாநகர இளைஞரணி செயலாளர் சார்லஸ் பிரிட்டோ தலைமை தாங்கினார். தொடர்ந்து கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி பொதுமக்களை சந்தித்து கையெழுத்து பெற்றனர். இந்த கையெழுத்து பிரதிகளை முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஜவகர் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மாநகர செயலாளர் ராஜா செய்து இருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory