» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
ஞாயிறு 3, ஜூலை 2022 9:05:49 PM (IST)
தூத்துக்குடியில் கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி சிவஜோதி நகரைச் சேர்ந்த மந்திரம் மகன் வெங்கடேஷ் (33) என்பவரும் நந்தகோபால புரம் பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை மகன் அஜித் ராஜா (32) என்பவரும் நண்பர்கள். இந்நிலையில் இன்று (03.07.2022) கனகசபாபதி தெரு பகுதியில் வெங்கடேஷ், அஜித் ராஜா மற்றும் அஜித் ராஜாவின் நண்பர் ஒருவர் ஆகிய 3 பேர் சேர்ந்து மது அருந்தும் போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அஜித் ராஜா வெங்கடேஷை கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து வெங்கடேஷ் அளித்த புகாரின் பேரில் மத்தியபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகப்பெருமாள் வழக்கு பதிவு செய்து அஜித் ராஜாவை கைது செய்தார். மேலும் அஜித் ராஜா மீது ஏற்கனவே தூத்துக்குடி மத்தியபாகம், வடபாகம் ஆகிய காவல் நிலையங்களில் 6 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.