» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பெண்ணிடம் செல்போன் பறிப்பு : சிறுவன் போலீசில் ஒப்படைப்பு!

புதன் 22, செப்டம்பர் 2021 10:41:53 AM (IST)

தூத்துக்குடியில் பெண்ணிடம் செல்போன் பறித்த சிறுவனை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி கதிர்வேல் நகரைச் சேர்ந்தவர் சேகர் மனைவி கலா (35). இவர் அப்பகுதியில் டெய்லர் கடை நடத்தி வருகிறார். நேற்று மில்லர்புரம் பகுதியில் சாலையில் செல்போன் பேசிக்கொண்டே நடந்து சென்றுள்ளார். அப்போது பைக்கில் வந்த 2பேர் அவரது செல்போனை பறித்துச் சென்றுள்ளனர். 

இதையடுத்து கலா கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் செல்போன் பறித்த நபர்களில் ஒருவரை விரட்டி பிடித்தனர் மற்றொருவர் தப்பியோடி விட்டார். பின்னர் பிடிபட்ட நபரை பொதுமக்கள் சிப்காட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் செல்போன் பறித்தது 13 வயது சிறுவன் எனத் தெரியவந்தது. மேலும் தப்பியோடிய மற்றொரு சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory