» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்
அரசு மருத்துவமனைகள் குறித்து சந்தேகம் எழுகிறது: அண்ணாமலை கருத்து
திங்கள் 3, ஜூலை 2023 4:26:46 PM (IST)
ஒன்றரை வயது குழந்தையின் கை அகற்றம் விவகாரத்தில் மருத்துவமனை விளக்கம் ஏற்புடையதாக இல்லை என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், 17 வயதே ஆன கால்பந்து வீராங்கனை பிரியா, அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்ட தவறான சிகிச்சையால் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். வசதி வாய்ப்புகள் இல்லாத ஏழை எளிய மக்களின் ஆரோக்கியத்திற்கு ஒரே நம்பிக்கையாக விளங்கும் அரசு மருத்துவமனைகள், தொடர்ந்து இது போன்று சர்ச்சைகளில் சிக்குவது ஏற்புடையதல்ல.
அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து இது போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடப்பது, எதேச்சையானதா அல்லது பொதுமக்களிடையே அரசு மருத்துவமனைகள் குறித்து நம்பிக்கையின்மையை விதைப்பதற்கா என்ற சந்தேகம் எழுகிறது. உடனடியாக, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆய்வு நடத்தி, பொதுமக்களுக்குத் தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், தரமற்ற சிகிச்சை வழங்கியிருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு பாஜக சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புயல், வெள்ள மீட்பு பணிகளில் காங்கிரஸ் கட்சியினர் செயல்பட வேண்டும்: ராகுல் காந்தி
செவ்வாய் 5, டிசம்பர் 2023 3:41:45 PM (IST)

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் மிகுந்த ஏமாற்றம் தருகிறது: கே.எஸ்.அழகிரி
திங்கள் 4, டிசம்பர் 2023 4:34:38 PM (IST)

கலைஞர் நூற்றாண்டு விழா தேதியை மாற்றி அமைக்க வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
செவ்வாய் 28, நவம்பர் 2023 11:12:26 AM (IST)

ராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்: சச்சின் பைலட் நம்பிக்கை
சனி 25, நவம்பர் 2023 11:45:28 AM (IST)

வெற்றியோ தோல்வியோ, நாங்கள் உங்களை நேசிக்கிறோம்: இந்திய அணிக்கு ராகுல் ஆறுதல்
திங்கள் 20, நவம்பர் 2023 11:34:14 AM (IST)

திமுக ஆட்சியில் சுகாதாரத் துறை சீரழிந்துவிட்டது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
செவ்வாய் 14, நவம்பர் 2023 5:46:09 PM (IST)

அண்ணன்Jul 6, 2023 - 01:08:28 AM | Posted IP 162.1*****