» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்
மது விற்பனையை நம்பி ஆட்சி செய்வது தான் திராவிட மாடலா?- அன்புமணி கேள்வி!!
வியாழன் 5, ஜனவரி 2023 11:55:44 AM (IST)
தமிழகத்தில் மது விற்பனை வருமானம் இல்லை என்றால் ஆட்சி செய்ய முடியாது என்பதுதான் திராவிட மாடலா? என அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

அதனால் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை 3 ஆண்டுகளில் கட்டி முடிக்க வேண்டும். மதுரையோடு அறிவிக்கப்பட்ட மற்ற எய்ம்ஸ் மருத்துவமனைகள் தற்போது செயல்பட்டு வரும் நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் பணி தொடங்கப்படாமல் உள்ளது. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
ஆன்லைன் விளையாட்டை தடை செய்வதில் தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் இடையே போட்டி நடக்கிறது. ஆன்லைன் விளையாட்டு மூலம் தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். இதனை தடுக்க வேண்டும் என கடந்த ஆட்சி காலத்தில் பா.ம.க. போராட்டம் நடத்தியதால், அப்போதைய முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதித்து சட்டம் கொண்டு வந்தார்.
தற்போது தி.மு.க. அரசிடமும் ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய பலமுறை கோரிக்கை விடுத்த நிலையில், தி.மு.க. அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது.. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கையெழுத்திட கவர்னரிடம் அனுப்பப்பட்டும், அவர் ஏன் கையெழுத்திட மறுக்கிறார்? எனத்தெரியவில்லை. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு சட்டம் நிறைவேற்றிய பின்பு 10-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டனர். இதற்கு தமிழக கவர்னரே பொறுப்பு என பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறேன். ஆன்லைன் விளையாட்டுக்கள் மூலம் அந்த நிறுவனங்கள் தினமும் ரூ.200 கோடி சம்பாதிக்கின்றன.
தமிழகத்தில் கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. அதற்கு தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே தமிழகம் மதுவில் மூழ்கியுள்ளது. மதுவால் இந்த தலைமுறையை காப்பாற்ற முடியாவிட்டாலும், அடுத்த தலைமுறையை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல்-அமைச்சர் தலைமையில் மாதந்தோறும் கூட்டம் கூட்டி, போதை பொருள் குறித்து கண்டிப்புடன் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மிக மிக முக்கிய பிரச்சினையான போதை பொருள் விவகாரம் உருவெடுத்துள்ளது. இந்தியாவில் அதிக மது விற்பனை தமிழகத்தில்தான் நடக்கிறது. 55 ஆண்டாக தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகள், மது விற்பனையை நம்பித்தான் ஆட்சி செய்கின்றன. மது விற்பனை வருமானம் இல்லை என்றால் ஆட்சி செய்ய முடியாது என்பதுதான் திராவிட மாடலா? என்பது தெரியவில்லை.
தி.மு.க. தேர்தலின் போது ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்தார்கள். ஆனால், வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பின்வாங்குகிறார்கள். குறிப்பாக, நீட் தேர்வு ரத்து, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000, இதுபோன்று பல வாக்குறுதிகள் கொடுத்தார்கள். அதில் எதையும் நிறைவேற்றவில்லை.
2026-ல் சட்டமன்ற தேர்தலில், பா.ம.க தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும். அதற்கு முன்பு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் அதற்கான வியூகங்களை எடுப்போம். கூட்டணி தொடர்பான முடிவுகள் தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பு எடுப்போம். தமிழகத்தில் அதிகம் இளைஞர்கள் இருக்கும் கட்சி பா.ம.க.. அதிக அளவில் இளைஞர்கள் கட்சியில் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் பரபரப்பு அரசியல் ஒருபுறமும், பிரிவினை அரசியல் ஒருபுறமும் இருக்கின்றன. நாங்கள் நடுவில் நாகரிகமான அரசியல் செய்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுக நிகழ்ச்சிகளில் பேனர், கட்-அவுட், பிளக்ஸ் பேனர்கள் வைக்க தடை
வியாழன் 16, மார்ச் 2023 5:31:40 PM (IST)

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
செவ்வாய் 14, மார்ச் 2023 10:26:59 AM (IST)

இந்தியா பற்றி சில ஊடகங்கள் பொய்களை பரப்புகின்றன : அனுராக் தாக்குர் கண்டனம்
சனி 11, மார்ச் 2023 10:04:47 AM (IST)

மசோதாவை ஆளுநர் தாமதமாக திருப்பி அனுப்பியது கண்டிக்கத்தக்கது: அன்புமணி
வியாழன் 9, மார்ச் 2023 12:03:06 PM (IST)

எடப்பாடி என்னும் நம்பிக்கைத் துரோகியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை: ஓபிஎஸ் அறிக்கை
வெள்ளி 3, மார்ச் 2023 4:49:39 PM (IST)

நீட் தோ்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு: பிரதமரிடம் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்!
செவ்வாய் 28, பிப்ரவரி 2023 5:03:10 PM (IST)

MANGOJan 6, 2023 - 03:48:36 PM | Posted IP 162.1*****