» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
மெகா மாரத்தான் போட்டி: நாசரேத் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு
ஞாயிறு 3, மார்ச் 2024 7:05:50 PM (IST)
திருச்செந்தூரில் நடைபெற்ற மெகா மாரத்தான் போட்டியில் நாசரேத் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் 56 பேர் பங்கேற்றனர்.
நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பாலிடெக் னிக் கல்லூரி மாணவர்கள், கல்லூரியின் தாளாளரும் தூத்துக்குடி-நாசரேத் திரு மண்டல லே செயலருமான நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் வழி காட்டுதலின்படி,தமிழக முதல்வர் பிறந்தநாளை முன்னி ட்டு திருச்செந்தூரில் நடை பெற்ற மெகா மாரத்தான் போட்டியில் கல்லூரியின் சார்பில் மாணவர்கள் 56 பேர் மற்றும் ஆசிரியர்கள் 3 பேர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை முதல்வர் கோயில்ராஜ் தலைமையில் உடற்கல்வி இயக்குனர் விமல் சுதாகர் செய்திருந்தார்.