» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

மரியன்னை கல்லூரியில் அறிவியல் கண்காட்சி :பள்ளி மாணவர்கள் பங்கேற்பு!

புதன் 28, பிப்ரவரி 2024 5:06:17 PM (IST)



தூத்துக்குடி மரியன்னை கல்லூரியில் அறிவியல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவியர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் அறிவியல் தினத்தை முன்னிட்டு மரிய நட்சத்திர கழகத்தின் சார்பில் நடுநிலைப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கான அறிவியல் கண்காட்சி, மற்றும் வினாடி வினா நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் ஜெசி பெர்னாண்டோ தலைமை வகித்து கண்காட்சியை திறந்து வைத்தார். கல்லூரி செயலர் சிபானா, சுயநதிப் பிரிவு இயக்குனர் ஜோஸ்பின் ஜெயராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

தூத்துக்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் சுமார் 11 பள்ளிகளைச் சார்ந்த 1353 மாணவ மாணவியர்கள் கண்காட்சியில் கலந்துகொண்டனர். கண்காட்சியில் பள்ளி மாணவ மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் அறிவியல் நிகழ்வுகள், பரிசோதனைகள், அறிவியல் கொள்கைகள், செயல்முறை விளக்கங்கள் ஆகியவற்றை அனைத்து அறிவியல் துறையைச் சார்ந்த மாணவியர்கள் ஆர்வமுடன் விளக்கிக் காட்டினர். 

வினாடி வினா போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவியருக்கு ரூ.8000 மதிப்பிலான பரிசுத்தொகையும், பரிசு கோப்பைகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை மரிய நட்சத்திர கழக ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கிய ஜெனிசியஸ் அல்போன்ஸ் செய்திருந்தனார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory