» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

மாநில அளவிலான சிலம்பம், சுருள்வாள் போட்டி: நாசரேத் மர்காஷிஸ் மாணவர்கள் சிறப்பிடம்!

செவ்வாய் 20, பிப்ரவரி 2024 4:02:39 PM (IST)



மாநில அளவிலான சிலம்பம் மற்றும் சுருள்வாள் போட்டிகளில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பதக்கங்களை வென்றனர்.

மாநில அளவிலான சிலம்பம் , சுருள்வாள் மற்றும் கராத்தே போட்டிகள் சாயர்புரம் போப் கல்லூரியில் நடைபெற்றது. தூத்துக்குடி ஸ்பார்ட்டன்ஸ் கழகத்தினரும், சாயர்புரம் போப் கல்லூரியும் இணைந்து போட்டிகளை நடத்தினர். 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில், மர்காஷிஸ் மேல் நிலைப்பள்ளியின் 9-ஆம் வகுப்பு மாணவர் ரோகித், தொடுமுறை சிலம்பப் போட்டியில் முதலிடமும், சுருள்வாள் வீசுவதில் முத லிடமும் பெற்றார்.13 வய துக்குட்பட்டோர் பிரிவில், 9-ஆம் வகுப்பு மாணவர் தருண்சன், ஒற்றைச் சிலம்பம் போட்டியில் முதலிடமும், தொடுமுறை போட்டியில் மூன்றாம் இடமும் பிடித்தார். 

12 வயதுக்குட்பட்டோர் பிரிவில், ஏழாம் வகுப்பு மாணவர் கார்த்தி கிருஷ்ணா தொடுமுறை சிலம்பப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பதக்கங்களையும், சான்றிதழ்களையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் கென்னடி வேதராஜ் வழங்கினார். உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர், உடற்கல்வி ஆசிரியர் தனபால் ஆகியோர் கலந்து கொண்டனர். இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory