» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

மர்காஷிஸ் பள்ளியில் தமிழக அரசின் இலவச மிதி வண்டிகள் வழங்கும் விழா!

புதன் 6, டிசம்பர் 2023 7:43:03 PM (IST)



நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் தமிழக அரசின் இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலை யில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற் றது. தலைமை ஆசிரியர் கென்னடி வேதராஜ் தலைமை தாங்கினார். தொழிற்கல்வி ஆசிரியர் ஜெயக்குமார் ஆரம்ப ஜெபம் செய்தார். நாசரேத் பேரூராட்சி தலைவர் நிர்மலா ரவி கலந்து கொண்டு 168 மாணவர்களுக்கு மிதி வண்டிகளை வழங்கினார். 

நிகழ்ச்சியில், நாசரேத் பேரூராட்சி முன்னாள் தலைவர் ரவி செல்வகு மார்,நாசரேத் பேரூராட்சி துணைத் தலைவர் அருண் சாமுவேல், கவுன்சிலர்கள் ஜேம்ஸ், அதிசயமணி, சாமுவேல்,லிடியா பால்ராஜ் ஆகியோர் கலந்து கொண்ட னர். முதுகலை விலங்கியல் ஆசிரியர் இமானுவேல் நன்றி கூறினார். தொழிற் கல்வி ஆசிரியர் ஜெய்சன் பாபு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory