» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

மூக்குப்பீறி பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்!

வியாழன் 30, நவம்பர் 2023 4:20:07 PM (IST)



மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணன் வழங்கினார்.

நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.மூக்குப்பீறி ஊராட்சி மன்ற தலைவர் கமலா கலையரசு தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் செல்வின் முன்னிலை வகித்தார். 

தமிழக மீன் வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அர சின் விலையில்லா சைக்கிள்களை வழங்கிசிறப்புரையாற்றினார்.விழாவில் மொத்தம் 103 மாணவ, மாணவிக ளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட் டது.

இந்நிகழ்வில் திமுக வர்த்தக அணி மாநில இணை செயலாளர் உமரிசங்கர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இராமஜெயம், ஆழ்வார்திருநகரி யூனியன் சேர்மனும், திமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பா ட்டு அணி அமைப்பாளருமான ஜனகர், திருச்செந்தூர் கோட்டாட்சியர் குருச் சந்திரன் ஏரல் வட்டாட்சியர்கைலாசகுமாரசாமி, ஆழ்வார்திருநகரி 
வட்டார வளர்ச்சி அலுவலர் பாக்கியம்லீலா, மேலஆத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ்குமார்,உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பள்ளி தலைமை ஆசிரியர் எட்வர்ட் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் செல்வின், தலைமை ஆசிரியர் எட்வர்ட், ஆசிரியர் காரட் காபிரியேல் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory