» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் பொறியியல் கல்லூரியில் வாக்காளர் அடையாள அட்டை சிறப்பு முகாம்
புதன் 29, நவம்பர் 2023 5:08:30 PM (IST)

நாசரேத் பொறியியல் கல்லூரியில் மாணவ,மாணவிகள் வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் நடந்தது.
நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் மாணவ_மாணவிகளுக்கு வாக்காளர் பட்டியலில் இளம் முதல் முறை வாக்காளர்களை சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடந்தது. ஏரல் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பேச்சிமுத்து தலைமை வகித்து வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கான அவசியத்தை குறித்து எடுத்துரைத்தார்.கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் வரவேற்றார்.
முகாமில் சுமார் 150 மாணவ_ மாணவிகள் வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கு விண்ணப்பித்தத்தோடு 40 மாணவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்தனர். இதில் துணை தாசில்தார் முத்துலெட்சுமி, வருவாய் ஆய்வாளர் மகாதேவன், கிராம நிர்வாக அலுவலர்கள் செந்தாமரைகண்ணன், முத்து மாலை, முத்துராஜ் மற்றும் ஜேம்ஸ்,உதவியாளர் ராஜ்மனோ மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் ஜெயக்குமார் ரூபன், முதல்வர் ஜெயக்குமார், நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் ஜிம்ரீவ்ஸ், ஷீபாதங்கபுஷ்பம், உதவியாளர் விக்டர் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா
வியாழன் 26, ஜூன் 2025 12:04:59 PM (IST)

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் பொன் விழா தொடக்க விழா
செவ்வாய் 24, ஜூன் 2025 10:41:21 AM (IST)

தூத்துக்குடி ஹோலி கிராஸ் பள்ளியில் சர்வதேச யோகா தினம்
சனி 21, ஜூன் 2025 11:28:16 AM (IST)

சக்தி வித்யாலயா பள்ளியில் சர்வதேச யோகா தினம்
சனி 21, ஜூன் 2025 11:18:39 AM (IST)

தூய இஞ்ஞாசியார் பள்ளியில் சுற்றுச்சூழல் தினம்
புதன் 18, ஜூன் 2025 3:09:33 PM (IST)

மாணவ, மாணவிகளுக்கு நோட்டு வழங்கும் விழா
செவ்வாய் 17, ஜூன் 2025 12:12:13 PM (IST)
