» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் மரக்கன்று நடும் விழா
செவ்வாய் 21, நவம்பர் 2023 10:28:52 AM (IST)

நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் தூத்துக்குடி _நாசரேத் திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனத்துறை மற்றும் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது. கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன் தலைமை வகித்தார். திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனத்துறை இயக்குனர் ஜாண் சாமுவேல் மரக்கன்று நட்டு நிகழ்ச்சி யை தொடங்கி வைத்தார். கல்லூரி வளாகத்தில் மொத்தம் 25 மரக்கன்று கள் நடப்பட்டன.
இதில் ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திருமண்டல லே செயலாளரும், கல்லூரி தாளாளருமான நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் தலைமையில் முதல்வர் கோயில்ராஜ் , பர்சார் தனபால், கல்லூரி உடற்கல்வி இயக்குனர் விமல் சுதாகர், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் லிவிங்ஸ்டன் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் பாராட்டு விழா!
சனி 8, பிப்ரவரி 2025 8:37:06 AM (IST)

கீதா மெட்ரிக்மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
திங்கள் 3, பிப்ரவரி 2025 8:44:04 PM (IST)

நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்
வியாழன் 30, ஜனவரி 2025 10:02:58 AM (IST)

இஞ்ஞாசியார் பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்வு
புதன் 29, ஜனவரி 2025 5:53:27 PM (IST)

செய்துங்கநல்லூர் எம்.எம்.நடுநிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
திங்கள் 27, ஜனவரி 2025 11:47:48 AM (IST)

செவித்திறன் குறைந்தோர்க்கான பள்ளியில் குடியரசு தினவிழா
திங்கள் 27, ஜனவரி 2025 10:22:16 AM (IST)
