» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு!

வியாழன் 16, நவம்பர் 2023 10:06:00 AM (IST)



நாசரேத்புனிதலூக்கா செவிலியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ,மாணவிகளுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. 
       
தூத்துக்குடி மாவட்டம்,  நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி தாளாளர் டாக்டர் கமலி ஜெயசீலன் தலைமை வகித்தார். மாணவி அனுஷா தெபோராள் வரவேற்றார். 

முன்னாள் எம்.பி., ஏ.டி.கே.ஜெயசீலன், கல்லூரி முதல்வர் சோபியா செல்வராணி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.மாணவ,மாணவிக ளுக்கு  போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.மாணவி  ஸ்வேதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதில் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவி பிரைட்டி  நன்றி கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory