» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி கீதா மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆண்டு விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

சனி 4, பிப்ரவரி 2023 4:25:03 PM (IST)



தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள கீதா மெட்ரிக்குலேஷன் உயர்நிலைப் பள்ளி 18-வது ஆண்டு விழா  நடைபெற்றது.

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சப்- கலெக்டர் தாக்ரே சுபம் நியான்டாரோ தலைமை தாங்கி மாணவ -மாணவி களுக்கு அறிவுரை வழங்கினார். பள்ளி செயலாளர் ஜீவன் ஜேக்கப் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் ஜெஸிந்தா ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கும், ஆசிரியர் களுக்கும் பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். 

பின்னர் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், அறிவுத்திறன் வளர்க்கும் வகையில் பேச்சு போட்டிகளும் நடைபெற்றன. விழாவில் சுதன்கீலர், சுதாசுதன், மகிழ்ஜான், கீர்த்தனா மகிழ், ராக்கேஷ், ஜீனா ஜீவன், உள்பட ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். ஆசிரியர் காளீஸ்வரி நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory