» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு எல்இடி டிவி வழங்கல்
திங்கள் 21, நவம்பர் 2022 3:57:24 PM (IST)
கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் ஆய்வக பயன்பாட்டிற்கு பள்ளி ஆசிரியர்கள் சார்பாக எல்இடி டிவி வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 2100க்கு மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், மாணவிகளின் ஆய்வக பயன்பாட்டிற்காக பள்ளி ஆசிரியர்கள் சார்பாக ரூ.62ஆயிரம் மதிப்பிலான எல்இடி டிவியினை பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் ருத்ரத்ன குமாரி, கண்ணன் ஆகியோர் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயலதாவிடம் வழங்கினர். எல்இடி டிவி வழங்கிய ஆசிரியர்களுக்கு மாணவிகள் நன்றி தெரிவித்தனர்.