» கல்வி / வேலை » வழிகாட்டி (தூத்துக்குடி)
அரசு இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க விழிப்புணர்வு பேரணி!
வியாழன் 6, ஜூலை 2023 5:14:30 PM (IST)

தூத்துக்குடியில் அரசு இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகப்படுத்தும் நோக்கத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளி டி.சவேரியார்புரம், சிலுவைப்பட்டி அஞ்சல், தூத்துக்குடி -2 என்ற முகவரியில் இயங்கி வருகிறது. இப்பள்ளியில் மாணவர் சேர்வதற்கு வயது வரம்பு 12வயதிற்கு மேல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். இப்பள்ளியில் குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய ஏழு துறைகள் இயங்கி வருகின்றன.
இப்பள்ளியில் 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கு மாணவர் சேர்க்கையினை அதிகப்படுத்தும் நோக்கத்தில் பொது மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணியானது இசைப்பள்ளி தலைமையாசிரியர் சிவகாம செல்வி தலைமையில் நடைபெற்றது. இசைப்பள்ளி வளாகத்திலிருந்து தாளமுத்துநகர் மற்றும் மாதாநகர் வழியாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் இசை கலைஞர்கள் திரளாக கலந்துக்கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளஸ் 2 முடித்த பின் என்ன படிக்கலாம்? ம.சு. பல்கலைக்கழகம் வழங்கும் படிப்புகள் - முழு பட்டியல்
திங்கள் 24, பிப்ரவரி 2025 4:35:36 PM (IST)

கடின உழைப்பும் பயிற்சியும் இருந்தால் உயர் பதவி கிடைக்கும்: அரசு செயலர் அறிவுரை
சனி 15, பிப்ரவரி 2025 5:53:57 PM (IST)

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்
வியாழன் 7, நவம்பர் 2024 8:54:38 AM (IST)

நன்னீர் அலங்கார மீன்வளர்ப்பு குறித்த பயிற்சி: தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி அழைப்பு
புதன் 9, அக்டோபர் 2024 5:18:05 PM (IST)

அரசு ஐடிஐகளில் நேரடி சேர்க்கை செப்.30 வரை நீட்டிப்பு : ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்!
வெள்ளி 6, செப்டம்பர் 2024 7:45:55 PM (IST)

குரூப் 2, 2ஏ தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சனி 25, மே 2024 11:45:50 AM (IST)
