» கல்வி / வேலை » வழிகாட்டி (தூத்துக்குடி)
அரசு இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க விழிப்புணர்வு பேரணி!
வியாழன் 6, ஜூலை 2023 5:14:30 PM (IST)

தூத்துக்குடியில் அரசு இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகப்படுத்தும் நோக்கத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளி டி.சவேரியார்புரம், சிலுவைப்பட்டி அஞ்சல், தூத்துக்குடி -2 என்ற முகவரியில் இயங்கி வருகிறது. இப்பள்ளியில் மாணவர் சேர்வதற்கு வயது வரம்பு 12வயதிற்கு மேல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். இப்பள்ளியில் குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய ஏழு துறைகள் இயங்கி வருகின்றன.
இப்பள்ளியில் 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கு மாணவர் சேர்க்கையினை அதிகப்படுத்தும் நோக்கத்தில் பொது மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணியானது இசைப்பள்ளி தலைமையாசிரியர் சிவகாம செல்வி தலைமையில் நடைபெற்றது. இசைப்பள்ளி வளாகத்திலிருந்து தாளமுத்துநகர் மற்றும் மாதாநகர் வழியாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் இசை கலைஞர்கள் திரளாக கலந்துக்கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி., நேர்முக தேர்வில் மாற்றம்
திங்கள் 4, டிசம்பர் 2023 5:13:36 PM (IST)

தூத்துக்குடியில் 17ஆம் தேதி கல்விக்கடன் சிறப்பு முகாம் - ஆட்சியர் தகவல்!
சனி 4, நவம்பர் 2023 4:24:07 PM (IST)

தூத்துக்குடி கின்ஸ் அகாடமியில் வங்கிப் பணிக்கு மாதிரி நோ்முகத் தோ்வு
திங்கள் 30, அக்டோபர் 2023 7:54:14 AM (IST)

ஒருங்கிணைந்த மருந்தாளுநர் பட்டயப் படிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு
சனி 16, செப்டம்பர் 2023 10:04:48 AM (IST)

தூத்துக்குடியில் செப்.16ல் தொழில் துவங்க முகாம் பயிற்சி!
திங்கள் 11, செப்டம்பர் 2023 4:20:37 PM (IST)

தனித்தேர்வர்களுக்கான முதல்நிலை தொழிற்தேர்வு: செப்.18க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
வெள்ளி 8, செப்டம்பர் 2023 4:28:54 PM (IST)
