» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
ரயில்வேயில் 32,428 காலிப் பணியிடங்கள்: பிப்.22-க்குள் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:18:25 PM (IST)
இந்திய ரயில்வேயில் 32,428 காலிப் பணியிடங்களுக்கு பிப்.22-க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே துறை, நாடு முழுவதும் உள்ள 32 ஆயிரத்து 428 காலிப்பணியிடங்களை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப உள்ளது. அதில் தமிழகத்திற்கு உட்பட்ட தென்னக ரயில்வேயில் மட்டும் 2,694 பணியிடங்கள் உள்ளன. அதற்கான அறிவிப்பு https://www.rrbchennai.gov. in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு கல்வி தகுதி எஸ்.எஸ்.எல்.சி. படித்து இருந்தால் போதுமானது.
விண்ணப்பத்தாரர்களுக்கு வயது வரம்பு 18 முதல் 36 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு ஆரம்ப சம்பளம் ரூ.18 ஆயிரத்தில் இருந்து தொடங்குகிறது. அதில் பெண்கள், முன்னாள் படைவீரர்கள், ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர், சிறுபான்மையினர் ஆகியோர் ரூ.250 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். மற்ற விண்ணப்பதாரர்கள் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வருகிற 22-ம்தேதி கடைசிநாளாகும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சவுதி அரேபிய மருத்துவமனைகளில் பணியிடங்கள் : பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 18, மார்ச் 2025 12:01:03 PM (IST)

மருத்துவர், செவிலியர் பணியிடங்களுக்கு 24-ம்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்: பொது சுகாதாரத்துறை அறிவிப்பு
செவ்வாய் 18, மார்ச் 2025 11:57:16 AM (IST)

இந்திய வேளாண்மைத் துறையில் 55 காலியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு!
புதன் 19, பிப்ரவரி 2025 5:12:31 PM (IST)

சவுதி அரசு மருத்துவமனைகளில் பணியிடங்கள்: பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்!
சனி 8, பிப்ரவரி 2025 11:03:53 AM (IST)

ரயில்வே பள்ளிகளில் 1036 பணியிடங்கள்: ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்பு!
சனி 18, ஜனவரி 2025 12:26:18 PM (IST)

பாரத ஸ்டேட் வங்கியில் 13,735 காலிப்பணியிடங்கள்: தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்!
வியாழன் 19, டிசம்பர் 2024 4:42:23 PM (IST)
