» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் 500 அப்ரன்டிஸ் பணியிடங்கள்: செப்.17ம் தேதி கடைசி நாள்!
வெள்ளி 13, செப்டம்பர் 2024 5:52:39 PM (IST)
யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் 500 அப்ரன்டிஸ் பணியிடங்களுக்கு செப்.17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில், தொழில் பயிற்சி சட்டம் 1961ன் கீழ், 500 அப்ரன்டிஸ் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் உள்ள 500 அப்ரன்டிஸ் காலியிடங்களில் தமிழகத்தில் மட்டும் 55 பணியிடங்கள் உள்ளன. ஆந்திராவில் 50 இடங்களும், கேரளாவில் 22 இடங்களும், கர்நாடகாவில் 40 இடங்களும் உள்ளன.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க, 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PwBD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம் ரூ.944. எஸ்.சி., எஸ்.டி, பிரிவினருக்கு ரூ.708. PwBD பிரிவினருக்கு ரூ.472 விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த வேண்டும். ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். https://www.unionbankofindia.co.in/english/home.aspx என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. .
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் பணியிடங்கள்: ஜன.31க்குள் விண்ணப்பிக்கலாம்!
வெள்ளி 23, ஜனவரி 2026 8:11:54 AM (IST)

ரயில்வே துறையில் 22 ஆயிரம் காலிப்பணியிடங்கள்: பிப்ரவரி 20க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!
வெள்ளி 26, டிசம்பர் 2025 4:35:08 PM (IST)

எஸ்பிஐ வங்கியில் 996 காலிப்பணியிடங்கள்: விண்ணப்பிக்க கடைசி தேதி டிச.23!
சனி 6, டிசம்பர் 2025 12:02:37 PM (IST)

அஞ்சல்துறை வங்கியில் 348 பணி இடங்கள்: அக்.29க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 23, அக்டோபர் 2025 4:09:02 PM (IST)

7,565 கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள்: எஸ்.எஸ்.சி., அறிவிப்பு!
வியாழன் 25, செப்டம்பர் 2025 12:48:27 PM (IST)

தமிழக காவல்துறையில் 3665 பணி இடங்கள் : செப்.21 வரை விண்ணப்பிக்கலாம்..!
வெள்ளி 19, செப்டம்பர் 2025 12:55:39 PM (IST)



RajadharshiniSep 14, 2024 - 12:28:37 PM | Posted IP 172.7*****