» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் 496 இடங்கள்: நவ.30 கடைசி நாள்

செவ்வாய் 28, நவம்பர் 2023 5:35:59 PM (IST)

இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் காலியாக உள்ள 496 இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் காலியாக உள்ள 496 இடங்களுக்கு பிஎஸ்சி., பி.இ., படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Junior Executive (Air Traffic Control): 496 இடங்கள் (பொது-199, பொருளாதார பிற்பட்டோர்- 49, ஒபிசி- 140, எஸ்சி-75, எஸ்டி-33). சம்பளம்: ₹40,000- 1,40,000.

வயது: 30.11.2023 தேதியின்படி 27 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 10 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். 

தகுதி: இயற்பியல் மற்றும் கணித பாடப்பிரிவை முக்கிய பாடமாகக் கொண்டு பிஎஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதாவதொரு பொறியியல் பாடப்பிரிவில் பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தால் ஆன்லைனில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, மொழித் திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவ தகுதித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: பொது/ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோர் பிரிவினருக்கு கட்டணம் ₹1000/-. இதை ஆன்லைனில் செலுத்தவும். எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.

www.aai.aero என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.11.2023.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory