» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

வட்டார கல்வி அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

திங்கள் 3, ஜூலை 2023 3:47:07 PM (IST)

தமிழ்நாடு கல்வித்துறையில் காலியாக உள்ள 32 வட்டார கல்வி அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: வட்டார கல்வி அதிகாரி..

சம்பளம்: ரூ.36,900-1,16,600.
வயது: 1.7.2023 தேதியின்படி 40க்குள்.

தகுதி: தமிழ்/ஆங்கிலம்/கணிதம்/இயற்பியல்/வேதியியல்/தாவரவியல்/ விலங்கியல்/ உயிரியல்/ புவியியல்/ வரலாறு போன்ற பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் இளநிலைப் பட்டப்படிப்பை முடித்து பி.எட்., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கட்டணம்: எஸ்சி/எஸ்சிஏ/எஸ்டி பிரிவினருக்கு ரூ.300/-. இதர பிரிவினருக்கு ₹600/-. இதை ஆன்லைனில் செலுத்தவும்.

டிஆர்பி யால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். 

எழுத்துத் தேர்வு 2 பகுதிகளாக நடத்தப்படும்.பகுதி-ஏ வில் கட்டயாய தமிழ் மொழி தேர்ச்சி தேர்வும், பகுதி- பி யில் விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி அடிப்படையில் முக்கிய பாடத்திலிருந்தும் கேள்விகள் கேட்கப்படும்.. பகுதி- பி தேர்வில் இடம் 

பெறும் முக்கிய பாடங்கள், மதிப்பெண்கள் விவரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.www.trb.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 5.7.2023.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory