» செய்திகள் - விளையாட்டு » மருத்துவம்

தேன் & துளசியின் மருத்துவ பலன்கள் :



மூளை சோர்வு, மூளை பலம்: 

10 துளசி இலையை எடுத்து ஒரு குவளை நீரில் போட்டு காய்ச்சி ஏலக்காய் 2, தேன் 2 டீஸ்பூன், சிறிது பசும்பால் கலந்து பருகினால் களைப்படைந்த மூளை சோர்வு நீங்கி சுறுசுறுப்படையும். சிறிது துளசி இலையை ஒரு டம்ளர் நீரில் போட்டு ஊற வைத்து அந்தத் தண்ணீரை குடித்தால் மூளை பலம் பெரும்.

புகைப்பிடிப்பதால் வரும் கேட்டிற்கு: 

துளசி இலை தூதுவளை கண்டங்கத்திரி இம்மூன்று இலைகளையும் ஒவ்வொரு கைப்பிடியளவு எடுத்து லேசாக எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு அத்துடன் சுக்கு மிளகு திப்பிலி மூன்றிலும் பத்து கிராம் எடுத்து இடித்து கலந்து காய்ச்ச வேண்டும். அக்குடிநீர் கால் லிட்டராக வற்றியதும் வடித்து சிறிது தேன் கலந்து வைத்து கொண்டு காலை மாலை 18நாள் சாப்பிட குணமாகும்.

நெஞ்சுவலி குணமாக: 

அரைக்கைப்பிடியளவு துளசி இலையுடன் அரை கைப்பிடியளவு கற்கண்டை பொடித்து போட்டு 2ஸ்பூன் தேன்விட்டு அடுப்பில் வைத்து அதனுடன் 400மில்லி தண்ணீர் விட்டு 200மில்லியாக வற்ற வடிகட்டி வேளைக்கு 2 தேக்கரண்டி வீதம் 2 வேளை பருகிவர நெஞ்சுவலி குணமாகும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital


CSC Computer Education





Thoothukudi Business Directory