» சினிமா » செய்திகள்
புதிய படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்தார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்!
புதன் 1, ஏப்ரல் 2026 11:51:12 AM (IST)
தமிழ் திரையுலகில் தனக்கெனத் தனித்துவமான மேக்கிங் பாணியைக் கொண்ட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், தனது அடுத்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.
'பீட்சா' மூலம் அறிமுகமாகி 'ஜிகிர்தண்டா', 'பேட்ட', 'மகான்' எனப் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் கார்த்திக் சுப்புராஜ். இவரது இயக்கத்தில் வெளியான 'ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக அந்தப் படத்தின் ரெட்ரோ காலக்கட்ட உருவாக்கம் ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றது.இறுதியாக, இவர் இயக்கத்தில் வெளியான ரெட்ரோ திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. தற்போது முன்னணி நடிகர்களுக்குப் பதில், முழுக்க முழுக்க புதுமுக நடிகர்களை வைத்து ஒரு சுயாதீனத் திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது.
இப்படத்தைப் பல்வேறு சர்வதேசத் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பிப் திரையிடத் திட்டமிட்டுள்ளார். அதன் பின்னரே திரையரங்குகளில் இப்படத்தை வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. கார்த்திக் சுப்புராஜின் இந்தச் சுயாதீன முயற்சித் திரையுலகினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

100 மில்லியன் பார்வையாளர்கள்: யூடியூப்பில் கூலி படத்தின் பவர்ஹவுஸ் பாடல் புதிய சாதனை!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:05:45 PM (IST)

இறுதி கட்டத்தை எட்டிய ஜன நாயகன் சென்சார் பணிகள்: மே 8-ல் ரிலீஸ்? - ரசிகர்கள் உற்சாகம்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:03:15 PM (IST)

சல்மான் கான் - நயன்தாரா கூட்டணியின் புதிய படம்: ஈகைத் திருநாளுக்கு வெளியீடு!
சனி 25, ஏப்ரல் 2026 11:55:40 AM (IST)

ஜனநாயகன் திரைப்படம் லீக் விவகாரம்: படத்தொகுப்பாளர் இடை நீக்கம்!
சனி 25, ஏப்ரல் 2026 11:09:09 AM (IST)

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா? - கமல்ஹாசன் பதில்
வெள்ளி 24, ஏப்ரல் 2026 12:06:07 PM (IST)

ஜனாதிபதி விருந்தில் நடிகை பிரியங்கா மோகன்: தென் கொரிய அதிபருடன் சந்திப்பு!
புதன் 22, ஏப்ரல் 2026 4:49:10 PM (IST)

