» சினிமா » செய்திகள்

ரஜினி 171க்கு அப்புறம் கைதி 2... கார்த்தி தகவல்!!

சனி 2, மார்ச் 2024 12:28:44 PM (IST)

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 'ரஜினி 171' படத்தை முடித்துவிட்டு 'கைதி 2'க்குத்தான் வருவார் என்று நடிகர் கார்த்தி தெரிவித்தார். 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஆக்சன் திரில்லர் திரைப்படமாக கடந்த 2019ல் வெளியான திரைப்படம் கைதி. இந்த படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. நடிகர் கார்த்தி மனதில் நிற்கும்படியான ரோலில் நடிக்க கதாநாயகி, பாடல் என எதுவுமே இல்லாமல், கார்த்தியை இதற்குமுன் பார்த்திடாத ஒரு பரிணாமத்தில் காட்டிய படம் கைதி. மாநகரம் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இரண்டாவது திரைப்படமாக கைதி வேற லெவல் ஹிட்டு கொடுத்தது.

நடிகர் கார்த்தி, "டில்லி சீக்கிரம் திரும்பி வருவான். அடுத்த வருடம் நாங்கள் படப்பிடிப்பைத் தொடங்குகிறோம். நானும் இப்போது ஒப்பந்தம் ஆகியிருக்கும் படங்களை முடித்து விடுவேன். லோகேஷும் 'ரஜினி 171' படத்தை முடித்துவிட்டு 'கைதி 2'க்குத்தான் வருவார் என்று நினைக்கிறேன். சீக்கிரம் வருகிறோம்" என்று அப்டேட் கொடுத்தார்.

அவர் நலன் குமாரசாமி இயக்கத்தில் 'வா வாத்தியாரே' என்ற படத்தில் நடித்து வருகிறார். அதேசமயம் '96' பட புகழ் இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்திலும் நடித்து வருகிறார். இதனிடையே 'சர்தார் 2' உருவாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory