» சினிமா » செய்திகள்
லஞ்சப் புகார் விவகாரத்தில் உடனடி நடவடிக்கை: மத்திய அரசுக்கு விஷால் நன்றி!
சனி 30, செப்டம்பர் 2023 5:19:14 PM (IST)
திரைப்பட தணிக்கை அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்தமைக்காக மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்புத் துறைக்கு நடிகர் விஷால் நன்றி தெரிவித்துள்ளார்.

விஷால் நடிப்பில் செப்.15ஆம் தேதி வெளியான மார்க் ஆண்டனி படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. குறிப்பாக எஸ்.ஜே. சூர்யா நடிப்பினை பலரும் பாராட்டி வருகிறார்கள். ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூலித்த இப்படம் நேற்று ஹிந்தி மொழியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இதனிடையே, மகாராஷ்டிராவில் இப்படத்தின் டப்பிங் மற்றும் திரையிடலுக்காக அதிகாரிகள் தன்னிடம் ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும் படம் வெளியாக வேண்டும் என்பதால் இரண்டு பரிவர்த்தனைகளாகக் கேட்ட தொகையைக் கொடுத்ததாகவும் விஷால் தெரிவிததார்.
நடிகர் விஷாலின் இந்த குற்றச்சாட்டு சினிமா துறையினரிடம் மட்டுமன்றி பலரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் திரைப்பட தணிக்கை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக நடிகர் விஷால் கூறிய புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சக்ம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமீர் அண்ணாவிடம் வருத்தம் தெரிவிக்கிறேன்: ஞானவேல் ராஜா அறிக்கை!
புதன் 29, நவம்பர் 2023 11:10:05 AM (IST)

குறுகிய காலத்திலேயே சாதனைகளை செய்து காட்டியவர்: உதயநிதிக்கு கமல் வாழ்த்து!
திங்கள் 27, நவம்பர் 2023 4:08:20 PM (IST)

சேரி என்ற கருத்திற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன்: குஷ்பு திட்டவட்டம்!
சனி 25, நவம்பர் 2023 4:33:35 PM (IST)

த்ரிஷாவிடம் மன்னிப்பு கோரினார் மன்சூர் அலிகான்!
வெள்ளி 24, நவம்பர் 2023 12:26:43 PM (IST)

கங்குவா படப்பிடிப்பில் விபத்து: நடிகர் சூர்யா காயம்?
வியாழன் 23, நவம்பர் 2023 4:35:22 PM (IST)

21 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே படப்பிடிப்பு தளத்தில் ரஜினி, கமல்: வைரல் புகைப்படங்கள்
வியாழன் 23, நவம்பர் 2023 4:06:52 PM (IST)
