» சினிமா » செய்திகள்

தேசிய விருது : இளையராஜாவிடம் ஆசி பெற்ற ஸ்ரீகாந்த் தேவா!!

செவ்வாய் 29, ஆகஸ்ட் 2023 4:26:53 PM (IST)



‘கருவறை’ என்ற குறும்படத்துக்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் இளையராஜாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

இ.வி.கணேஷ்பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள குறும்படம் ‘கருவறை’. இப்படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார். இப்படத்தின் இசைக்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள இளையராஜாவின் ஸ்டூடியோவுக்கு நேரில் சென்ற ஸ்ரீகாந்த் தேவா இளையராஜாவின் காலில் விழுந்து ஆசி பெற்றார். அவருக்கு இளையராஜா வாழ்த்து தெரிவித்தார். இதே போல படத்தின் இயக்குநரையும் இளையராஜா வாழ்த்தியுள்ளார். முன்னதாக ‘புஷ்பா’ படத்துக்காக தேசிய விருது அறிவிக்கப்பட்ட தேவிஸ்ரீ பிரசாத் இளையராஜாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory