» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இங்கிலாந்தில் டி -20 வென்று இந்திய மகளிர் அணி அசத்தல்!!

வியாழன் 10, ஜூலை 2025 5:51:43 PM (IST)

இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி டி -20 தொடரை வென்று இந்திய மகளிர் அணி, அசத்தி உள்ளது.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய மகளிர் அணி, அந்த அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் முடிவில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகித்தது. இந்நிலையில் மான்செஸ்டர் ஓல்ட் ட்ராபோர்ட் மைதானத்தில் நடந்த நான்காவது போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத அந்த அணியின் பேட்டர்கள், சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். 20 ஓவரில், 7 விக்கெட் இழப்புக்கு, 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக, டங்கிலி 22 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில், ராதா யாதவ், ஸ்ரீ சராணி தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

எளிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு, ஸ்மிருதி மந்தனா (32), சபாலி வர்மா (31) இணை அதிரடி துவக்கம் தந்தது. ஹர்மன்ப்ரீத் கவுர் (26) ஆறுதல் தந்தார். 17 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டிய இந்திய அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. ஒரு போட்டி மீதம் இருக்கும் போதே தொடரை 3-1 என வென்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education

Arputham Hospital





Thoothukudi Business Directory