» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தெற்காசிய பாடி பில்டிங் சாம்பியன்ஷிப் : இந்திய வீராங்கனை யாஜிக் தங்கம் வென்றார்

செவ்வாய் 17, ஜூன் 2025 5:05:53 PM (IST)


தெற்காசிய பாடி பில்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை யாஜிக் தங்க பதக்கம் வென்றார்.

பூடானில் 15வது தெற்காசிய ‘பாடி பில்டிங்’ அண்டு ‘பிசிக்’ சாம்பியன்ஷிப் போட்டிகள் 5 நாட்கள் நடந்தது. இதில் 155 மீ., உயரம் கொண்டவர்களுக்கான பிரிவில் அசத்திய இந்திய வீராங்கனை யாஜிக் ஹில்லாங் (அருணாச்சல பிரதேசம்) முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். மற்றொரு பிரிவில் யாஜிக் வெள்ளி வென்றார். 

அருணாச்சல பிரதேசம் சார்பில் சர்வதேச போட்டியில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை என சாதனைக்கும் யாஜிக் சொந்தக்காரர் ஆனார். இதுகுறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்ட செய்தியில்,‘‘அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த யாஜிக், தெற்காசிய ‘பாடி பில்டிங்கில்’ தங்கம், வெள்ளி என இரு பதக்கம் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது,’’ என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital



CSC Computer Education



New Shape Tailors



Thoothukudi Business Directory