» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடர்: ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி மீண்டும் சாம்பியன்!

திங்கள் 9, ஜூன் 2025 10:47:09 AM (IST)



நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரில் போர்ச்சுகல் அணி 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஜெர்மனியின் முனிச்சில் நடைபெற்ற நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில், ஸ்பெயின் அணியை ரொனால்டோவின் போர்ச்சுகல் எதிர்கொண்டது. ஸ்பெயின் 21வது நிமிடத்தில் ஜூபிமெண்டி மூலம் முதலில் கோல் அடித்தது. ஆனால் 26வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின்நுனோ மென்டெஸின் அற்புதமான கோல் அடித்தார். பின்னர் 45வது நிமிடத்தில் ஸ்பெயினின் ஓயர்சபால் ஒரு கோல் அடித்தார். 

இதனால் முதல் பாதியில் ஸ்பெயின் 2 - 1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இருப்பினும், 69வது நிமிடத்தில் போர்ச்சுக்கல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ சூப்பரான கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார்.அடுத்து பெனால்டிஷூட் அவுட்டில் 5-3 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி, போர்ச்சுகல் அணி UEFA நேஷன்ஸ் லீக் சாம்பியன் பட்டத்தை வென்றது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education


Arputham Hospital




Thoothukudi Business Directory