» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மாநில அளவிலான கராத்தே போட்டி. சாத்தான்குளம் பள்ளி மாணவர்கள் சாதனை

வியாழன் 19, அக்டோபர் 2023 10:54:29 AM (IST)



மாநில அளவிலான கராத்தே போட்டியில சாத்தான்குளம் மார்னிங் ஸ்டார் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
 
சென்னையில் 18வது ஆல் இந்தியா சிட்டோ ரியு ஓபன் கராத்தே மாநில அளவிலான போட்டிகள் நடந்தது. இதில் மாநில அளவில் இருந்து பல பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் சாத்தான்குளம் மார்னிங் ஸ்டார் பப்ளிக் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி மாணவர்கள்ஆரிக் ஜோஸ்வின் ஜோனா,தர்மராஜ் ,ஜெபிசா ஷாமிலி, யாஸ்லினா, அனிட், கார்த்திகா தேவி, ஸ்ரீர்ஷன், திரிஷிகா, காட்சன், வினய்சிங்,பிரதிக் சுமன் ஜெஸ்ரன்,ஜெஸ்டன்,ஜோஸின் வெல்பர் ராஜ், அவந்திகாஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டனர்.

போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகள் கட்டா பிரிவிலும், 2 மாணவர்கள் குமிதே பிரிவிலும் வெற்றி பெற்று பள்ளிககு பெருமை சேர்த்துள்ளனர்.வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சென்னை காரப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கணபதி சான்றிதழ் மற்றும் வெற்றிக் கோப்பைகளை வழங்கினார். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், பயிற்சி அளித்த கராத்தே பயிற்சியாளர் இசக்கியப்பன் ஆகியோரை பள்ளியின் முதல்வர் கலைச்செல்வி, ஆசிரியை அபர்னாலெட்சுமி உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளை பாராட்டினர் .


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education






Arputham Hospital



Thoothukudi Business Directory