» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மாத்தூர் தொட்டிப்பாலத்தில் தேர்தல் விழிப்புணர்வு : ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 2, ஏப்ரல் 2026 4:32:17 PM (IST)

புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மாத்தூர் தொட்டிப்பாலத்தில் அமைக்கப்பட்டிருந்த தேர்தல் விழிப்புணர்வு பதாகைகளை, மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஆர்.அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழகச் சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, SVEEP (Systematic Voters’ Education and Electoral Participation) திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மாத்தூர் தொட்டிப்பாலத்தில் அமைக்கப்பட்டிருந்த தேர்தல் விழிப்புணர்வு பதாகைகளை, மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஆர்.அழகுமீனா இன்று (02.04.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர், "சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து ஆட்சியர் விழிப்புணர்வு ஏற்படுத்திப் பேசியதாவது: "இந்தியத் திருநாட்டில் குடிமக்களாகிய நமக்குக் கிடைத்துள்ள மாபெரும் உரிமையான வாக்குரிமையை நாம் தவறாமல் பயன்படுத்த வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளைச் சார்ந்த 15,10,550 வாக்காளர்களும், வரும் ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள தேர்தலில் தவறாமல் வாக்களிக்க வேண்டும். நமது மாவட்டம் 100 சதவீத வாக்குப்பதிவை எட்டிய மாவட்டமாகத் திகழ வேண்டும் என்பதே மாவட்ட நிர்வாகத்தின் நோக்கம்.
இந்த இலக்கை அடைய அனைத்துத் துறையினர், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவ-மாணவியர் மற்றும் பொதுமக்களை ஒருங்கிணைத்துத் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் மாத்தூர் தொட்டிப்பால முகப்பில் அனைவரும் அறியும் வண்ணம் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக முதல்முறை வாக்காளர்கள், இளைஞர்கள் மற்றும் முதியோர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிட வேண்டும் என்றார்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், தேர்தல் விழிப்புணர்வு கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, பத்மநாபபுரம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் திருவட்டார் வட்டாட்சியர் மரகதவல்லி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தின் புதிய சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்: தேர்தல் ஆணையம் அதிரடி
வியாழன் 2, ஏப்ரல் 2026 8:57:03 PM (IST)

டேராடூன் ராணுவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்.5!
வியாழன் 2, ஏப்ரல் 2026 5:42:22 PM (IST)

தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி கட்டாயம்: ஆட்சியர் இரா.சுகுமார் அதிரடி உத்தரவு!
வியாழன் 2, ஏப்ரல் 2026 5:08:56 PM (IST)

பாஜக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும்: நயினார் நாகேந்திரன் உறுதி!
வியாழன் 2, ஏப்ரல் 2026 4:49:44 PM (IST)

திருச்சி கிழக்குத் தொகுதியில் விஜய் வேட்புமனுத் தாக்கல்: மும்முனைப் போட்டியில் த.வெ.க!
வியாழன் 2, ஏப்ரல் 2026 4:02:35 PM (IST)

ஆதவ் அர்ஜுனா கார் ஏறியதில் காவலர் கால் முறிவு: விஜய் பிரச்சாரத்தில் பரபரப்பு!
வியாழன் 2, ஏப்ரல் 2026 3:45:13 PM (IST)







