» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திமுக ஒரு குடும்பத்திற்காக ஆட்சி நடத்துகிறது : ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
ஞாயிறு 8, மார்ச் 2026 8:45:55 PM (IST)
திமுக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் வரை நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது, துன்பம் மட்டுமே மிச்சமாகும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: அதிமுகவில் இருந்த தேவையற்ற களைகள் தற்போது முழுமையாக அகற்றப்பட்டுவிட்டன. ஓ. பன்னீர்செல்வம் சென்ற இடம் 'ஆமை புகுந்த வீடு' போல மாறிவிடும். அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால் அதிமுக இனி செழித்து வளரும். அதிமுகவை யாராலும் விழுங்க முடியாது. எங்களது கட்சியிலிருந்து சென்ற 'செல்லாக்காசுகளை' தான் தற்போது திமுக சேர்த்து வருகிறது.தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களையும் சுரண்டி, ஒரே ஒரு குடும்பம் மட்டும் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறது. வரும் தேர்தலில் மக்கள் விரோதச் செயல்பாடுகளில் ஈடுபடும் இந்தக் குடும்ப ஆட்சியை வீழ்த்த வேண்டும். திமுக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் வரை நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது, துன்பம் மட்டுமே மிச்சமாகும்.
திமுக அரசு பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது. கொலை, கொள்ளை, வழிப்பறி மற்றும் திருட்டு நடக்காத நாளே இல்லை என்ற அவலநிலை நிலவுகிறது. பொதுமக்களுக்குப் பாதுகாப்பு இல்லாத இத்தகைய ஆட்சி தொடரக்கூடாது. திமுகவிற்குள் எப்போதும் குழப்பம் நீடித்துக் கொண்டே இருக்கிறது இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வருமான வரித்துறை ரூ.1.50 கோடி அபராதம்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து விஜய் மேல்முறையீடு
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:52:43 PM (IST)

வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கும் பணி : ஆட்சியர் சுகுமார் ஆய்வு
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:33:47 PM (IST)

உங்கள் வீட்டில் திருடிவிட்டு ரூ.2000 கொடுத்தால் வாங்குவீர்களா? சீமான் கேள்வி
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:23:56 PM (IST)

தமிழர் வாழ்வில் அமைதி, வளம் பெருகட்டும்: சரத்குமார் புத்தாண்டு வாழ்த்து!
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:05:54 PM (IST)

அமைச்சர் சேகர் பாபு மகன்களின் நிறுவனத்தில் வருமான வரித்துறை திடீர் சோதனை
திங்கள் 13, ஏப்ரல் 2026 4:50:17 PM (IST)

மீனவர் நலநிதி ரூ.20,000-ஆக உயர்த்தப்படும் : குமரி பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய் உறுதி!
திங்கள் 13, ஏப்ரல் 2026 4:04:49 PM (IST)







