» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லை அருகே அக்காவை வெட்டிக்கொன்ற வாலிபர் கைது: பரபரப்பு வாக்குமூலம்!
செவ்வாய் 20, ஜனவரி 2026 8:09:16 AM (IST)
நெல்லை அருகே அக்காவை சரமாரியாக வெட்டிக்கொன்றது ஏன் என கைதான வாலிபர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள தச்சன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராமராஜ். இவருக்கு 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். இதில் 2 மகள்கள், ஒரு மகனுக்கு திருமணம் ஆகி வெளியூர்களில் வசித்து வருகிறார்கள். ராதிகா (28) என்ற மகளும், கண்ணன் (25) என்ற மகனும் திருமணம் ஆகாமல் பெற்றோருடன் வசித்து வந்தனர். கண்ணன் கூலி வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் இருந்த ராதிகாவிற்கும், கண்ணனுக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரம் அடைந்த கண்ணன், அரிவாளை எடுத்து ராதிகாவை சரமாரியாக வெட்டிக்கொலை ெசய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேவர்குளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கண்ணனை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
அதாவது, ராதிகாவிற்கு, அதே பகுதியை சேர்ந்த திருமணம் ஆன ஒருவருடன் பழக்கம் இருந்து வந்தது. இது கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தான் கண்ணன் மற்றும் குடும்பத்தினருக்கு தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதனால் கண்ணன் தனது அக்காவை கண்டித்து வந்தார். சம்பவத்தன்று செல்போனில் ராதிகா யாரிடமோ பேசிக்கொண்டு இருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த கண்ணன், செல்போனை கேட்டு தகராறு செய்தார். ஆனால் ராதிகா தனது செல்போனை கொடுக்கவில்லை. இதனால் அத்திரம் அடைந்த கண்ணன் தனது அக்காவை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து கண்ணன் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில், ‘‘எனது அக்கா திருமணம் ஆன ஒருவருடன் தொடர்பில் இருந்து வந்தார். நான் பலமுறை கண்டித்தும் அவர் அந்த பழக்கத்தை விடவில்லை. இது ஊரில் உள்ள சிலருக்குதெரியவந்தது. அவர்கள் எங்கள் குடும்பத்தை பற்றி தவறாக பேச தொடங்கினார்கள். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அக்காவை வெட்டிக்கொலை செய்து விட்டேன்’’ என கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பணத்தை வாரி இறைத்து அப்பாவிகளின் வாயை அடைக்க முயற்சி: தவெக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!
சனி 18, ஜூலை 2026 5:46:54 PM (IST)

தமிழகத்தில் ஜூலை 22 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்!
சனி 18, ஜூலை 2026 5:39:54 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : அமைச்சர் மரிய வில்சன் ஆய்வு!
சனி 18, ஜூலை 2026 5:27:03 PM (IST)

அமைச்சர் ஆனந்த் மீது வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் ஞானசவுந்தரி த.வெ.க-விலிருந்து நீக்கம்!
சனி 18, ஜூலை 2026 11:29:22 AM (IST)

தமிழக வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.82 லட்சம் பறிமுதல்
சனி 18, ஜூலை 2026 10:42:22 AM (IST)

நீட் முறைகேடு போராட்டம்: சோனம் வாங்சுக்குடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த சீமான் கோரிக்கை!
வெள்ளி 17, ஜூலை 2026 4:53:33 PM (IST)








