» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இஸ்ரோ இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: குடும்ப பிரச்சினையால் விபரீத முடிவு!
செவ்வாய் 1, ஜூலை 2025 8:34:20 AM (IST)
காவல்கிணறு அருகே குடும்ப பிரச்சினையால் இஸ்ரோ இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
கன்னியாகுமரியில் ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்துக்கும், பணகுடி ரயில் நிலையத்துக்கும் இடையே காவல்கிணறு ரயில்வே மேம்பாலம் அருகில் நேற்று முன்தினம் இரவு ஒரு முதியவர் பிணம் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து நாகர்கோவில் ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியதாஸ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர்.
அப்போது அங்கு சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயில் மோதியதில் முகம் உள்பட உடலின் பல்வேறு பகுதிகளில் காயம் அடைந்த நிலையில் பிணமாக கிடந்தார். போலீசார் அந்த உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவரது சட்டைப்பையில் ஒரு ஆதார் கார்டு இருந்தது. அது பிணமாக கிடந்தவரின் ஆதார் கார்டுதான் என்பது தெரிய வந்தது.
அதில் இறந்தவரின் பெயர் சந்திரமோகன் (வயது 70) என்றும், கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகில் உள்ள பூஜப்புரை அருகில் உள்ள சித்ராநகர் பகுதியை சேர்ந்தவர் என்ற முகவரியும் இடம் பெற்றிருந்தது. போலீசார் இந்த முகவரியில் விசாரித்தபோது இறந்த சந்திரமோகன் பணகுடி அருகே மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியராக பணியாற்றியவர் என்பதும் தெரிந்தது.
பின்னர் அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சந்திரமோகன் தற்போது திருவனந்தபுரத்தில்தான் வசித்து வந்துள்ளார். அவருடைய மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் தனது மகள்களுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக அவர் மனம் உடைந்த நிலையில் இருந்ததாகவும், வீட்டில் இருந்து வெளியூர் சென்று வருவதாக கூறிவிட்டு வந்த சந்திரமோகன் நேற்று முன்தினம் இரவு 7.15 மணி அளவில் காவல்கிணறு பகுதியில் கன்னியாகுமரியில் இருந்து நெல்லை நோக்கி சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் போலீசார் தெரிவித்தனர்.
நேற்று சந்திரமோகனின் உடல் பிரேத பரிசோதனை முடிந்ததும் அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை உறவினர்கள் பெற்று திருவனந்தபுரத்துக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஈரோட்டில் தவெக தலைவா் விஜய் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு அனுமதி
ஞாயிறு 14, டிசம்பர் 2025 7:18:40 PM (IST)

தென்காசியில் மக்கள் நீதிமன்றம்: ரூ. 5 கோடி மதிப்புள்ள வழக்குகளுக்கு தீர்வு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 11:07:49 AM (IST)

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை புதிய வாக்காளர் பெயர் சேர்க்கும் முகாம்!
சனி 13, டிசம்பர் 2025 5:55:15 PM (IST)

தமிழகத்தில் 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
சனி 13, டிசம்பர் 2025 5:50:12 PM (IST)

திருப்பரங்குன்றம் பிரச்சினைக்கு பாஜக, திமுக அரசுதான் காரணம் : சீமான் குற்றச்சாட்டு!
சனி 13, டிசம்பர் 2025 4:04:43 PM (IST)

பெருமாநிலங்களை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு சாதனை : முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சனி 13, டிசம்பர் 2025 12:53:04 PM (IST)










