» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
விஷவண்டு கடித்து 2-ம் வகுப்பு மாணவன் சாவு: ஏர்வாடி அருகே பரிதாபம்!
திங்கள் 30, ஜூன் 2025 11:50:02 AM (IST)
ஏர்வாடி அருகே விஷ வண்டு கடித்து 7 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி அருகே உள்ள மாவடி பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர். கூலித்தொழிலாளியான இவரது மகன் ஜீவானந்தம் (7), அங்குள்ள ஒரு நடுநிலைப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். அதே பகுதியைச் சேர்ந்த பட்டாணித்துரை மகன் 1-ம் வகுப்பு படிக்கும் மாணவன் நித்தின்ராஜ்(6). இந்த 2 சிறுவர்களும் நேற்று முன்தினம் வீட்டின் முன் விளையாடிக் கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு கிடந்த தேங்காயில் இருந்த கடந்தை விஷவண்டு 2 சிறுவர்களையும் கடித்தது. இதனால் 2 பேரும் அலறினார்கள். அவர்களை மீட்டு களக்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதித்தனர். நேற்று அதிகாலையில் ஜீவானந்தம் உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஈரோட்டில் தவெக தலைவா் விஜய் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு அனுமதி
ஞாயிறு 14, டிசம்பர் 2025 7:18:40 PM (IST)

தென்காசியில் மக்கள் நீதிமன்றம்: ரூ. 5 கோடி மதிப்புள்ள வழக்குகளுக்கு தீர்வு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 11:07:49 AM (IST)

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை புதிய வாக்காளர் பெயர் சேர்க்கும் முகாம்!
சனி 13, டிசம்பர் 2025 5:55:15 PM (IST)

தமிழகத்தில் 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
சனி 13, டிசம்பர் 2025 5:50:12 PM (IST)

திருப்பரங்குன்றம் பிரச்சினைக்கு பாஜக, திமுக அரசுதான் காரணம் : சீமான் குற்றச்சாட்டு!
சனி 13, டிசம்பர் 2025 4:04:43 PM (IST)

பெருமாநிலங்களை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு சாதனை : முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சனி 13, டிசம்பர் 2025 12:53:04 PM (IST)










