» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விஷவண்டு கடித்து 2-ம் வகுப்பு மாணவன் சாவு: ஏர்வாடி அருகே பரிதாபம்!

திங்கள் 30, ஜூன் 2025 11:50:02 AM (IST)

ஏர்வாடி அருகே விஷ வண்டு கடித்து 7 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான். 

திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி அருகே உள்ள மாவடி பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர். கூலித்தொழிலாளியான இவரது மகன் ஜீவானந்தம் (7), அங்குள்ள ஒரு நடுநிலைப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். அதே பகுதியைச் சேர்ந்த பட்டாணித்துரை மகன் 1-ம் வகுப்பு படிக்கும் மாணவன் நித்தின்ராஜ்(6). இந்த 2 சிறுவர்களும் நேற்று முன்தினம் வீட்டின் முன் விளையாடிக் கொண்டு இருந்தனர்.

அப்போது அங்கு கிடந்த தேங்காயில் இருந்த கடந்தை விஷவண்டு  2 சிறுவர்களையும் கடித்தது. இதனால் 2 பேரும் அலறினார்கள். அவர்களை மீட்டு களக்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதித்தனர். நேற்று அதிகாலையில் ஜீவானந்தம் உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education




Arputham Hospital





Thoothukudi Business Directory