» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

போலீசார் வாகனத்தை பறித்ததால் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சனி 14, ஜூன் 2025 8:27:24 PM (IST)

கன்னியாகுமரியில் போலீசார் வாகனத்தை பறித்ததால் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த இடலாகுடியை சேர்ந்த விஷ்ணுநிதி (29) என்ற வாலிபரின் இருசக்கர வாகனத்தை கன்னியாகுமரி போலீசார் பறித்துச் சென்று திருப்பி கொடுக்க மறுத்ததால், கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் நடுரோட்டில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ குளித்து தற்கொலை முயன்றார்.

இதையடுத்து, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த விஷ்னுநிதி நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்த வாலிபரின் உறவினர்கள் நீதி கேட்டு போராட இருப்பதாக தகவல் வெளியானதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital


New Shape Tailors



CSC Computer Education




Thoothukudi Business Directory