» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கரும்பு ஆராய்ச்சி மையத்தில் ரூ.30,000 சம்பளத்தில் வேலை!

திங்கள் 22, ஏப்ரல் 2024 5:45:36 PM (IST)

கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் கரும்பு ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள கீழ்வரும் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் வரும் 26 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்று பயன்பெறலாம்.

பணி: Young Professional -I

காலியிடங்கள்: 2

தகுதி: தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல், ஏஐ போன்ற ஏதாவதொரு பாடத்தில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்று ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருப்பதுடன் எம்.எஸ். ஆபிஸ் சான்றிதழ் பெற்று கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: ஐசிஏஆர், எஸ்பிஐ, கோயம்புத்தூர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 26.4.2024

விண்ணப்பிக்கும் முறை: www.sugarcane.icar.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, ஏ4 வெள்ளைத்தாளில் தட்டச்சு செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளவும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital









Thoothukudi Business Directory