» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது
திங்கள் 4, மார்ச் 2024 11:24:41 AM (IST)
தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வை 20 ஆயிரத்து 114 மாணவ, மாணவிகள் எழுதினர்.
தமிழ்நாடு முழுவதும் பிளஸ்-1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் 90 தேர்வு மையங்களில் பிளஸ்-1 தேர்வு நடந்தது. மாவட்டத்தில் 206 பள்ளிகளில் படிக்கும் 9 ஆயிரத்து 313 மாணவர்கள், 10 ஆயிரத்து 801 மாணவிகள் ஆக மொத்தம் 20 ஆயிரத்து 114 பேர் பிளஸ்-1 தேர்வை எழுதினர். இதில் 142 மாற்றுத்திறனாளி மாணவர்களும் தேர்வு எழுதினர்.
இதற்கான வினாத்தாள்கள் மாவட்டத்தில் 5 காப்பகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன. இந்த வினாத்தாள் கட்டுகளை 24 வழித்தட அலுவலர்கள் பாதுகாப்புடன் அந்தந்த தேர்வு மையங்களுக்கு எடுத்துச் சென்றனர். தேர்வை கண்காணிக்க முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் தலைமையில் 150 ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்வுகள் வருகிற 25-ந் தேதி வரை நடக்கிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுக கூட்டணிக்கு பாமக வந்தால், அதிமுக கூட்டணிக்கு விசிக செல்லுமா? : முதல்வர் விளக்கம்
திங்கள் 21, ஏப்ரல் 2025 10:51:50 AM (IST)

பல்கலைக்கழக வேந்தராக ஆளுநரே தொடர்கிறார்: ஆளுநர் மாளிகை விளக்கம்!
திங்கள் 21, ஏப்ரல் 2025 8:48:53 AM (IST)

நெல்லை அருகே ஒரே குடும்பத்தில் 6 பேர் தற்கொலை முயற்சி : போலீஸ் விசாரணை!
ஞாயிறு 20, ஏப்ரல் 2025 7:09:14 PM (IST)

குடிநீரில் கழிவுநீர் கலப்பு: 3 பேர் சாவுக்கு தி.மு.க. அரசே பொறுப்பு - இ.பி.எஸ். அறிக்கை!
ஞாயிறு 20, ஏப்ரல் 2025 12:10:13 PM (IST)

என்னுடைய ரசிகர்கள் மட்டுமல்ல.. த.வெ.கவின் விர்ச்சுவல் வாரியர்ஸ்: விஜய் பேச்சு
சனி 19, ஏப்ரல் 2025 4:44:50 PM (IST)

தமிழக மக்களின் அவுட் ஆஃப் கன்ட்ரோல் ஆக ஸ்டாலின் உள்ளார்: தமிழிசை விமர்சனம்!
சனி 19, ஏப்ரல் 2025 4:32:20 PM (IST)
