» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பொதுத்தேர்வு முடியும் வரை மின் நிறுத்தம் கூடாது : அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவு
வெள்ளி 1, மார்ச் 2024 5:01:13 PM (IST)
பொதுத்தேர்வு முடியும் வரை மின் நிறுத்தம் செய்யக்கூடாது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் அதிகாரிகள் உடனான ஆய்வுக்கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, கோடைகாலத்தின் போது சீரான மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியுள்ள நிலையில், பராமரிப்புக்காக மின் நிறுத்தம் செய்ய வேண்டாம் என்றும் தேர்வு காலம் முடியும் வரை துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.