» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மின்னல் தாக்கி இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.4லட்சம் நிவாரண நிதி வழங்கல்!
புதன் 29, நவம்பர் 2023 4:40:32 PM (IST)

மின்னல் தாக்கி இறந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் ரூ.4 இலட்சத்திற்கான நிவாரண நிதியை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் வழங்கினார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம், வளையமாதேவி பள்ளிக்கூடத் தெருவைச் சார்ந்த சபரிராஜா (23) என்பவர் கடந்த 6.11.2023 அன்று கல்குளம் வட்டம் மணவாளக்குறிச்சி கிராமம் பெரியகுளம் ஏலா பகுதியில் நெல் அறுவடை இயந்திரம் வாயிலாக நெல் அறுவடை மேற்கொண்ட நிலையில் திடீரென பெய்த மழையின் காரணமாக அருகாமையில் உள்ள விவசாய சங்ககட்டிடத்தில் மழைக்காக ஒதுங்கி நின்ற சபரிராஜா மீது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கி காலமானார்.
அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இறந்தவரின் வாரிசுதாரரான அவரது மனைவிக்கு முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.4 இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், வழங்கினார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சங்கரநாரணயன் உடன் இருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
வியாழன் 13, நவம்பர் 2025 5:31:06 PM (IST)

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை : துரைமுருகன் விளக்கம்
வியாழன் 13, நவம்பர் 2025 4:52:40 PM (IST)

கூத்தன்குழியில் நவ.21ல் கடலம்மா மாநாடு : சீமான் அறிவிப்பு
வியாழன் 13, நவம்பர் 2025 4:29:46 PM (IST)

தமிழக உரிமையை காப்பதில் தி.மு.க. அரசு தோல்வி: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
வியாழன் 13, நவம்பர் 2025 4:25:24 PM (IST)

மேகதாது அணை: திமுக ஆட்சியாளர்களின் செயல் மன்னிக்க முடியாத குற்றம் - எடப்பாடி பழனிசாமி
வியாழன் 13, நவம்பர் 2025 4:14:45 PM (IST)

ஒரு தேர்தலை கூட சந்திக்காத தவெகவுடன் கூட்டணியா? - நயினார் நாகேந்திரன் விளக்கம்
வியாழன் 13, நவம்பர் 2025 4:07:39 PM (IST)








