» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மின்னல் தாக்கி இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.4லட்சம் நிவாரண நிதி வழங்கல்!
புதன் 29, நவம்பர் 2023 4:40:32 PM (IST)

மின்னல் தாக்கி இறந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் ரூ.4 இலட்சத்திற்கான நிவாரண நிதியை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் வழங்கினார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம், வளையமாதேவி பள்ளிக்கூடத் தெருவைச் சார்ந்த சபரிராஜா (23) என்பவர் கடந்த 6.11.2023 அன்று கல்குளம் வட்டம் மணவாளக்குறிச்சி கிராமம் பெரியகுளம் ஏலா பகுதியில் நெல் அறுவடை இயந்திரம் வாயிலாக நெல் அறுவடை மேற்கொண்ட நிலையில் திடீரென பெய்த மழையின் காரணமாக அருகாமையில் உள்ள விவசாய சங்ககட்டிடத்தில் மழைக்காக ஒதுங்கி நின்ற சபரிராஜா மீது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கி காலமானார்.
அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இறந்தவரின் வாரிசுதாரரான அவரது மனைவிக்கு முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.4 இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், வழங்கினார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சங்கரநாரணயன் உடன் இருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் அருகே சாலை மையத்தடுப்பில் மோதி கவிழ்ந்த ஆம்னி பஸ்; 13 பேர் காயம்
திங்கள் 15, டிசம்பர் 2025 7:46:19 AM (IST)

ஈரோட்டில் தவெக தலைவா் விஜய் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு அனுமதி
ஞாயிறு 14, டிசம்பர் 2025 7:18:40 PM (IST)

தென்காசியில் மக்கள் நீதிமன்றம்: ரூ. 5 கோடி மதிப்புள்ள வழக்குகளுக்கு தீர்வு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 11:07:49 AM (IST)

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை புதிய வாக்காளர் பெயர் சேர்க்கும் முகாம்!
சனி 13, டிசம்பர் 2025 5:55:15 PM (IST)

தமிழகத்தில் 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
சனி 13, டிசம்பர் 2025 5:50:12 PM (IST)

திருப்பரங்குன்றம் பிரச்சினைக்கு பாஜக, திமுக அரசுதான் காரணம் : சீமான் குற்றச்சாட்டு!
சனி 13, டிசம்பர் 2025 4:04:43 PM (IST)










