» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் கார்த்திகை தீபத் திருநாள் விழா

திங்கள் 27, நவம்பர் 2023 9:53:01 AM (IST)



தென்காசி உலகம்மன் உடனுறை காசி விஸ்வநாதர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தென்காசி உலகம்மன் உடனுறை காசி விஸ்வநாதர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலையில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இரவு சுவாமி அம்பாள் சிறப்பு அலங்கார சப்பரத்தில் மேள தாளம் முழங்க எழுந்திருளினர். 

சொக்கப்பனை அமைக்கப்பட்டு இருந்த சுவாமி சன்னதிக்கு சப்பரம் சென்றது. அங்கு சொக்கப்பனைக்கு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டு கொளுத்தப்பட்டது. பின்னர் அம்மன் சன்னதியில் அமைக்கப்பட்டு இருந்த சொக்கப்பனையும் கொளுத்தப்பட்டது . சிறப்பு அலங்கார தீபாராதனைக்கு பின் சுவாமி அம்பாள் சப்பரம் வீதி சென்று கோவிலை சென்றடைந்தது.

விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிபட்டனர். தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள கோவில்களில்  கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இதனால் கோவில்களில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital


CSC Computer Education






Thoothukudi Business Directory