» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
போதைப்பொருள் ஒழிப்பில் மெத்தனம்: 3 உதவி போலீஸ் கமிஷனர்கள் பணியிட மாற்றம்!
ஞாயிறு 26, நவம்பர் 2023 10:29:12 AM (IST)
சென்னையில் போதைப்பொருள் ஒழிப்பில் மெத்தனம் காட்டிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த புகாரில் சிக்கிய 9 இன்ஸ்பெக்டர்கள், 20 சப்-இன்ஸ்பெக்டர்கள் இதர போலீசார் 36 பேர்கள் என மொத்தம் 65 பேர்கள் மீது நடவடிக்கை பாய்ந்தது. சென்னை கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் காத்திருப்போர் பட்டியலில் அவர்கள் வைக்கப்பட்டனர். அவர்களில் 3 இன்ஸ்பெக்டர்கள் வெளிமாவட்டங்களுக்கு மாற்றப்படுவதற்காக டி.ஜி.பி. அலுவலக காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்களில் 7 சப்-இன்ஸ்பெக்டர்களும் 16 போலீசாரும் நேற்று வெளிமாவட்டங்களுக்கு தூக்கி அடிக்கப்பட்டனர். மீதி உள்ளவர்கள் மீதும் அடுத்த கட்ட நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது. இதற்கிடையில் புகாரில் சிக்கிய சென்னை உளவுப்பிரிவில் பணியாற்றிய 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 7 போலீசாரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர்.
இதே புகாரில் சிக்கிய 3 உதவி போலீஸ் கமிஷனர்கள் நேற்று சிவகங்கை, ராமநாதபுரம், செங்கல்பட்டு ஆகிய வெளிமாவட்டங்களுக்கு மாற்றப்பட்டனர். இவர்கள் மூவரும் வட சென்னை கூடுதல் கமிஷனர் சரகத்தில் பணியாற்றியவர்கள். டி.ஜி.பி. சங்கர்ஜிவால் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஈரோட்டில் தவெக தலைவா் விஜய் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு அனுமதி
ஞாயிறு 14, டிசம்பர் 2025 7:18:40 PM (IST)

தென்காசியில் மக்கள் நீதிமன்றம்: ரூ. 5 கோடி மதிப்புள்ள வழக்குகளுக்கு தீர்வு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 11:07:49 AM (IST)

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை புதிய வாக்காளர் பெயர் சேர்க்கும் முகாம்!
சனி 13, டிசம்பர் 2025 5:55:15 PM (IST)

தமிழகத்தில் 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
சனி 13, டிசம்பர் 2025 5:50:12 PM (IST)

திருப்பரங்குன்றம் பிரச்சினைக்கு பாஜக, திமுக அரசுதான் காரணம் : சீமான் குற்றச்சாட்டு!
சனி 13, டிசம்பர் 2025 4:04:43 PM (IST)

பெருமாநிலங்களை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு சாதனை : முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சனி 13, டிசம்பர் 2025 12:53:04 PM (IST)










